Monday, February 1, 2010

பறவைகளை படமெடுக்க ஆசையா?

வணக்கம் மக்கள்ஸ்,

கண்ணெதிரே மிக அருகில் ஒரு பறவையை பார்த்தால் உடனே மக்கள் சொல்வது "ஐயோ கைல கேமரா இல்லாம போயிடுச்சே" கேமரா இருக்கும் பட்சத்தில் அது செல்போன் கேமராவாக இருந்தாலும் சரி அந்த பறவையை க்ளிக்காமல் விட மாட்டோம். பறவைகள் பரவசத்தின் குறியீடுகள்.

ஆனால் தற்செயலாக வேண்டுமானால் பறவைகளை பக்கத்தில் படமெடுக்கலாம். இதற்கென்றே கேமராவை கட்டிகொண்டு கிளம்பினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
பறவைகளை படமெடுக்க ஆசைப்படாதவரே இருக்கமாட்டோம். இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட். தமிழில் இதற்கான குறிப்புகள் கண்ணில் படாத்தால் என் சொற்ப கால அனுபவத்தில் தெரிந்ததை இலுப்பைபூவாக இங்கு வைக்கிறேன்.

முதலில் பொதுவான சில விசயங்கள்.

ஆர்வம் இருந்தாலும் சில பொதுவான முக்கியமான அங்கலாய்ப்புகள் என்னவெனில்

1. இந்த சிட்டில முழுசும் கான்கிரீட் கூடுகள்தான். இதுல எங்க போய் பறவைகள் இருக்கு?
அதுக்கு எதாச்சும் ஃபாரஸ்ட்பக்கம்தான் போகனும்.

2. பறவைகள் புகைப்படம் எடுப்பது ரொம்ப காஸ்ட்லியான ஹாபி.விலைஉயர்ந்த
டெலிலென்சுகள் வேண்டும்.

இவை இரண்டுமே தவறானது.எப்படி என்று ஒவ்வொண்றாக பார்க்கலாம்.

பெருநகரத்தில் இருப்பவர்கள் உங்கள் குடி இருப்புக்கு அருகில் உள்ள மரங்களை கவனியுங்கள். இந்த சிட்டியில் எந்த பறவை இருக்கும் என்று நினைக்கவேண்டாம். கண்டிப்பாக குறைந்தபட்சம் காக்கை,மைனா,குயில்,புறா (அபார்ட்மெண்ட்களில் தவறாமல் இருக்கின்றது.)சிட்டுகுருவி(ஆமாங்க இது அழிந்தெல்லாம் போகவில்லை. சென்னை பெங்களூரிலேயே நிறய பார்த்தேன்)இருக்கும். சிட்டியில் குறைவாக பறவைகள் இருந்தாலும் அவைகள் அடைக்கலமாக சொற்ப இடங்களே இருக்கும்.உங்கள் குடி இருப்புக்கு அருகில் உள்ள மரங்களை கவனியுங்கள். மாலை நேரத்தில் ஒற்றை மரத்தில் எத்தனை பறவைகளின் சத்தம் கேட்கும் கேட்டிருப்பீர்களே?

அடுத்ததாக மனிதனை பார்த்து பார்த்து பழகி போன பறவைகள்தான் பக்கத்தில் வரும். இதற்காக 200கிமீ கிளம்பி போய் ஒரு காட்டுக்குள் சென்றால் அங்கே உள்ள பறவைகள் தமக்கும் நமக்கும் 50 அடி இடைவெளியையாவது மெயின்டெய்ன் பண்ணும்.காரணம் காட்டில் மனிதன் புது பிராணி. அதேசமயத்தில் உங்கள் வீட்டை ஒட்டி உள்ள மரமோ அல்லது பக்கத்தில் வீடு கட்டாமல் இருக்கும் காலி பிளாட்டில் உள்ள புதரோ அல்லது நீங்கள் வாக்கிங் செல்லும் பார்க்கோ அங்கு வரும் பறவைகளுக்கு சிட்டி மனிதன் சக பிராணி.அவற்றிற்கு வேறு போக்கிடம் இல்லை.சர்வ சாதாரணமாக அருகில் சென்று வர முடியும்.

பறவைகளின் அருகில் செல்வதுதான் முக்கியம்.அதன் பின் படமெடுப்பது ச்சும்மா ஜுஜுபீ

அடுத்தது காஸ்ட்லி லென்சுகள் கண்டிப்பாக உதவும்தான். ஆனால் எவ்வளவு விலை உயர்ந்த லென்சுகளாக இருந்தாலும் ஒரு பறவையின் பக்கத்தில் சென்று எடுக்கும் படம்தான் பட்டாசாக இருக்கும். அதுவும் உங்கள் கிட் லென்சில் கூட எடுக்கமுடியும் :) நம்புங்கள். எப்படி அவ்வளவு அருகில் செல்வது என்பதை பின்பு பார்ப்போம்.

முதலில் பறவைகளை கண்டறிய உங்கள் வீடு,பார்க், அலுவலகம், போய்வரும் பாதைகள் இவற்றை சுற்றிலும் எப்போதும் போல் இல்லாமல் பறவைகள் தென்படும் என்ற புதிய பார்வையில் பாருங்கள். அவை தென்படும். அந்த இடங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மரங்களில் புதர்களில் வீட்டு மாடங்களில் எங்கும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் பறவைகள் அமரும். அந்த இடங்களை கவனித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பறவைகளின் சப்தம் மூலமாக கண்டுபிடிக்க காலை மாலை நேரங்கள்தான் இதற்கும் உகந்தவை. பறவைகள் பாடுவது சப்தம் கொடுப்பதெல்லாம் இந்த நேரங்களில்தான் இருக்கும்.

பொதுவாக அசைவுகளுக்கு அலர்ட் ஆகுமாறு கண்களை பழக்கி கொள்ளுங்கள். ஒரு புதரையோ மரத்தையோ பார்க்கும் போது நம் பார்வையில் கவர் ஆகும் பரப்பில் எங்கு ஒரு சிறு அசைவு இருந்தாலும் உங்களுக்கு கவனம் அங்கு போகவேண்டியது வரும். கேட்க சாதாரணமாக தெரிந்தாலும் பழக்கத்தில் வருவது சிரமம். பறவைகள் மேல் ஆர்வமிருப்பின் இது தானாக வரும்.

காலை 9 மணி வரையில் படு பிசியாக சுற்றும் பறவைகள் அதற்கு மேல் கண்ணில் படாது. சப்தம் கொடுப்பதும் மிக குறைந்துவிடும். நன்றாக கவனித்து பார்த்தால் டயர்டாகி மரங்களில் புதர்களில் சப்தமெழுப்பாமல் அமர்ந்திருக்கும். அந்த நேரங்களில் நாம் நாம் ஓரளவுக்கு அருகில் செல்ல முடியும். நாம் கவனிக்கும் வரை சப்தம் காட்டாமல் அமர்ந்திருக்கும்.

Monday, January 19, 2009



Sunday, November 2, 2008



Sunday, October 12, 2008

உங்கள் மரணத்தை அருகில் பார்த்ததுண்டா

சாவை நெருங்கிவிட்டதாக உணர்ந்திருக்கிரீர்களா? கண்ணை மூடியதும் மரணம்தான் என நினைத்திருக்கிறிகளா?. அதைவிட அது ஆனந்தமாககூட இருக்கும் என தெரியுமா?

ஒரு வாரத்துக்கு முன்னாடி சரியான காய்ச்சல்ங்க எனக்கு. மூணு போர்வை போர்த்தி படுக்கும் அளவு குளிர்.மனைவியும் ஊரில் இல்லை. எனக்கு கால்ல முள்ளுகுத்திட்டா கூட பக்கத்துல மனைவி வேணும்( முள்ளு குத்துலைன்னாலும்தான்). அவசரமா அவள கிளம்பி வரச்சொல்லிட்டு எங்க பேமிலி டாக்டரிடம் போய் அவர பேசவே விடாம எனக்கு ஃபுட் பாய்சன் ஆயிடுச்சுன்னு சொல்லி. ஃபுட்பாய்சனுக்குண்டானா இருந்த இல்லாத சிம்டம்சைல்லாம் சொல்லி மருந்துவாங்கிட்டு வந்தாச்சு.

மூணுநாள் கோர்ஸ் மாத்திரை கம்ப்ளீட் ஆகியும் காய்ச்சல் விடவே இல்லை. உடம்பு கிழிஞ்ச நாறாயிடுச்சு. திரும்ப டாக்டரிடம் போய் ப்ளட்டெஸ்ட் பண்ணதுல( ப்ளட் டெஸ்ட் எடுத்த நர்ஸ நிலா கொலைவெறியோட பாத்தது தனிகதை) ப்ளேட்லெட் கவுண்ட்ஸ் அதளபாதாளாத்துக்கு போனது தெரிஞ்சது. வைரல்ஃபீவர்.

உடனே ஒரு இஞ்செக்சன் ட்ரிப்போட போட சொல்லி எழுதி மூணாவது ஃப்ளோர்க்கு அனுப்பிட்டார். பொதுவாவே உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்கப்பவோ, பிசினஸ்ல லாஸோ, அல்லது டிஸட்வாண்டேஜா எதாச்சும் நடக்கும் போதெல்லாமோ எனக்கு எங்கண்ணனுக்கெல்லாம் நக்கல் நையாண்டி லொள்ளு திமிரு டபுளாயிடும். பிறவியே அப்படித்தான். அதே போலதான் சசி நிலாவோட ஏகப்பட்ட நக்கலோட ட்ரிப்போட போய் கையில் ஊசில்லாம் குதி ட்ரிப்பும் போட்டாச்சு.

கிட்ட்டதட்ட ஒரு லார்ஜ் அளவு மருந்து ஒண்ணை சிரிஞ்சில் எடுத்து எடுத்து ட்யூப் வழியா செலுத்திட்டு போயிட்டாங்க. அத போட்ட உடனே கிர்ருன்னு தலைல்லாம் சுத்த ஆரம்பிச்சிருச்சு. அந்த வழியா போன சிஸ்டர்கிட்ட "என்னங்க இது குவார்ட்டர் அடிச்ச மாதிரி இருக்கு"ன்னு கேட்டேன் சிரிச்சுகிட்டே போயிட்டாங்க,

ஆனா அப்படியே கான்சியஸ் போக ஆரம்பிச்சுது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு வார்த்தையை உள்ள இருந்து இழுத்து வந்துதான் ரெண்டு வார்த்தையே பேச முடிஞ்சது. வாய் வேற குழறுது. சசியிடம் ஒரு சிஸ்டரை வர சொல்லி ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மருந்து இப்படித்தான் ரியாக்ட் பண்ணுமான்னு கேட்டேன். இத கேக்கறதுக்கே அவ்ளோ கஷ்டமாயிடுச்சு. அதுக்கு அந்த நர்ஸ்..

" எத்தனை பேர் ட்ரிப் ஏத்திகிட்டு கம்முன்னு படுத்திருக்காங்க. நீங்க மட்டும் ஏன் சார் இப்படி பண்றீங்க?"

உஸ்ஸ்ஸ் என்னால முடியல.

இன்னொருவிஷயம் அந்த இஞ்செக்சனால உடம்பும் மனசும் அவ்ளோ ஆனந்தமா இருக்கு. அப்படியே மிதப்பது போல இருக்கு.துளி கூட பயம் வரல. ஆனா மருந்து அலர்ஜி ஆயிடுசான்ன கவலையாலதான் இந்த கேள்வில்லாம்.

இதுக்கு மேல கான்சியஸ இழுத்து பிடிக்க முடியல. கண் மூட ஆரம்பிக்குது. நினைவுதப்புது. சரி மருந்து அலர்ஜியாயிடுச்சு. மேட்டர் முடியபோவுது. கடைசியா சசிகிட்ட சொல்லிடுவோம்னு இருக்கும் சக்தியெல்லாம் திரட்டி
"ச..சீ இ..ங்..க பா..ரு" ன்னு இதை மட்டும்தான் சொல்ல முடிஞ்சுது. அவ அதுக்கு

"என்ன மாமா? பாப்பா கழுத்தபுடிச்சு கிள்ளாத. எத்தன தடவ சொல்றது. அப்புறம் பாரு. ம்ம்ம் சொல்லுங்க மாமா"

உஸ்ஸ் அப்பா நீயுமா? கொஞ்ச நாளா இப்ப வாங்கி கொடுத்த ஸ்கூட்டி பெப்பில் அவளா எல்லா வேலையும் பறந்து பறந்து செய்யறதுல பூரிச்சுப்போயிருந்தேன். நாம இல்லன்னாலும் என் நம்ம பொண்ட்டாட்டி எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவான்னு.

அடி என் செல்ல கேனபுள்ள உன் புருஷன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு அதுகூட தெரியாம இருக்கியே கண்ணு.ட்ரிப் முடிஞ்சு பின்னாடிதான் நான் செத்ததே உனக்கு தெரிமாட்டம் இருக்கு. இப்படி இருக்க நீ இந்த உலகத்துல இந்த குட்டி பொண்ண வெச்சுகிட்டு எப்படிடி சமாளிப்ப. எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவும் எனக்கு சக்தி இல்ல. சரி நமக்கான எல்லா வழியும் அடைபட்டிருச்சுன்னு நினைக்கும் போதே கான்சியஸ் அப்படியே போயிடுச்சு.
ஆனாலும் கடைசியா மனைவி குழந்தையை பத்தி நினைத்ததும் கண்முன் அவர்கள் நின்ற உருவமும் மட்டும் ஓரத்தில் அப்படியே இருக்கு.

ஆனால் இது எதுவுமே துக்கமாகவோ கஷ்டமாகவோ பயமாகவோ துளிகூட தெரியவில்லை. ஆனந்தகடலுக்குள் அல்லவா இருக்கிறேன்.

அப்படியே நான் மிதப்பதையும் எங்கோ செல்வதையும் உணர்கிறேன். அப்படியே ஒரு வெளிச்சமான வெளிச்சம் ஆனால் கண்ணை கூசாத ரம்மியமான இடத்தை பார்க்கிறேன். மிகப்பரந்தவெளி. இரண்டு அல்லது மூண்று அடி உயரத்தில் கண்ணுக்கு குளுமையான தூய வெண்மையில் அசையாத ஒரே அளவில் ஏதோ ஒண்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எண்ணிலடங்காமல் இருக்கிறது.

அதை பார்க்கிறேன். மனதில் அப்படி ஒரு சலனமே இல்லாத அமைதி. மெதுவாக அந்த ஒன்றொன்றும் இந்த உலகின் உயிர்கள் என்று புரிகிறது. மீண்டும் அமைதி. எல்லா உயிர்களும் ஒரே அளவு ஒரே உயரம். ஒவ்வொண்றுக்கும் பாகுபாடில்லாமல் எல்லாமே ஒரே அளவு தரப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் யாரோ உணர வைப்பதாக படுகிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை.

எல்லோருக்கும் ஒரே அளவு தரப்பட்டிருந்தால் யாருக்கு யார் கொடுப்பது? யாரை யார் காப்பாத்துவது. எல்லாரிடமும் எல்லாமே இருக்கிறது. இதில் கொடுக்க என்ன இருக்கிறது எடுக்க என்ன இருக்கிறது.

இது தோண்றிய அடுத்த கணம் ஓரத்தில் மறையாமல் இருந்த மனைவியும் நிலாவும் மனதில் இருந்து சுத்தமாக மறைந்துவிட்டனர். இப்போ மனதில் பேரமைதி பேரானந்தம்.இனி இந்த உலகத்தில் என்னுடைய கடமை ஒண்றுமே இல்லை.அடுத்தது என்ன மரணம்தானே ஆஹா அதை பார்க்கலாம் எப்படி வருகிறது என்று ஆர்வத்துடன் ஆனந்தத்துடன் உற்று கவனிக்கிறேன். எந்த புள்ளியிலிருந்து வருமென்று. ம்ஹூம் வரவே இல்லை :(. கண்ணை விழித்துபாக்க தோண்றுகிறது. சிரமப்பட்டு முயற்சி செய்ய விழிப்பு வந்தது. முன்புபோலவே மயக்கத்துடன்.

பின்பு சசியை கூப்பிட்டு 5 நிமிடத்துக்கு ஒருதடவை பார்த்து கான்சியஸ் போகாமல் பாத்துக்கோ எனும்போதுதான் பாவம் அவளுக்கு சீரியஸ்னெஸ் புரிந்தது.

ட்ரிப் முடியும்போது ஓரளவுக்கு தெளிவாகிவிட்டேன். ட்ரிப் எடுத்த பின்பு ஹெட்நர்ஸை கூப்பிட்டு(அப்போதும் பேச்சு சரியாக வரவில்லை) இந்த மருந்து இப்படி எஃபெக்ட் கொடுக்குமென்று முன்னாயே சொல்லலாமில்லையா? தண்ணி அடித்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் எனக்கே இப்படின்னா மற்றவர்கள் என்ன ஆவாங்க என்றதுக்கு. நான்கைந்து நர்ஸ்களுமாக "பயந்துட்டீங்களா" என்று கொல்லென்று சிரித்தார்கள்.

மருந்தின் உபயம் மனசுல அப்படி ஒரு அமைதி. இல்லைன்னா அருவாளை தேடி இருப்பேன்.

திரும்பி வீடு வரும்போது எல்லாமே புதுசாக தெரிகிறது. அந்த ஆட்டுகுட்டி எவ்வளவு அழகா துள்ளி குதிக்குது. அந்த மரத்தின் பச்சை என்ன அற்புதம்.


ஒரு பெத்தடின் ஊசியிலோ ஒரு இழுப்பு கஞ்சாவிலோ கூட இப்படி ஒரு அனுபவம் நேரலாமாயிருக்கலாம். இது கூட அட்டு மேட்டராக இருக்கலாம். ஆனால் சாவுவந்துவிட்டது என்று பயமில்லாமல் ஆனத்தத்தோடு அதை எதிர்கொண்டு எல்லோருக்கும் வரும் குடும்ப கவலைக்கும் விடை கண்டு கிட்டதட்ட ஞானம் கிடைக்கப்பெற்ற ரேஞ்சில் ஸ்ஸ்ஸ் அப்பா அற்புதமான அனுபவம்ங்க.

இப்படி வலியில்லாமல் ஆனத்தமாக சலனமில்லாத மனசுடன் அமைதியாக மரணம் வருமெனில் மரனத்தை நேசிக்கிறேன்,


என் மனைவிக்குத்தான் வீட்டுக்கு வந்து விஷயம் முழுசா தெரிஞ்சு... பாவம் புள்ள மூணு மணி நேரம் மூடவுட்

======================================================

அடுத்த நாளும் ட்ரிப் போடவேண்டி இருந்தது. டாக்டரிடம் அனுபவத்தை சொன்னேன். சொல்லிவிட்டு இதற்காகவெல்லாம் அந்த இஞ்செக்சனை மாத்திடாதீங்க. அதையே போடுங்க எண்றதும். உனக்கு இனி அது கிடையாது. ப்ரிஸ்கிரிப்ஷனையும் வாங்கிக்கொண்டு விட்டார். விட்டா அதை நீயே வாங்கி போட்டுக்குவ. உனக்கு நல்லாயிடுச்சு ஓடிப்போயிடுன்னுட்டார்,

ஆக்சுவலா அது அலர்ஜிதான் ஆயிருக்கு.யாருக்கும் அப்படி ஆனதில்லையாம். ஆனால் எனக்கு கம்மியான அலர்ஜி ஆகி இருக்கு.

Saturday, July 26, 2008

no photos pls

Saturday, July 12, 2008

நிலாவுடன் அளாவும் கொடி

பெங்களூர்
Banglor
எங்க வீட்டு நிலா

வானத்து நிலா
Half moon
குடிசை
Night light

Saturday, February 9, 2008

நெகிழ வைத்த பதிவர் இம்சையின் முடிவு.

தயவு செய்து முழுவதுமாக படிக்கவும் இது மொக்கை அல்ல
Dear Friends

Good Evening, Thank you all for your support and guidance for an important decision in my life.
I have now made up my mind to quit my professional career in IBM and start my own project for supporting students from economically challenged background and move into social services full time.

It is a very hard decision for which I have been asking advice to almost everyone for past 2 months and now my mentor Mrs Sudha Murthy and all friends have finally agreed for my decision after getting the permission from my wife in person.

Mrs Sudha Murthy told me that she will provide me a most challenging work in social field so that I will runaway back to my family in Pune in a Year. I have accepted it.

I thank my wife whole heartedly for supporting my decision bcos she is now going to support me and my family for rest of her life.

I will keep you all updated. As of now I would be involved in setting up few training schools for training students who do their degree (BA, BCOM, BSC & Diploma) in Regional language. These students would be trained and placed in diferent companies.

Initially this plan would be implemented in Karnataka and in 5 years planning to expand to Tamilnadu, Kerala, Andra and Maharastra. Later on all over India.

It is going to be a very big and most challenging project. I have not yet thought how to implement it but I am now ready for the challenge. I would be officially moving into this role from April.

Planning to say good bye to IBM next week. I am not there in the pictures but Pavan's mother/ my wife is there.

Thanks
Venky


இது நம் சக பதிவர் இம்சையிடம் இருந்து வந்த மெயில்.இம்சசை (அ) வெங்கியை ஒரு மொக்கை பதிவராக, ஜாலியாக கும்மிகளில் கலந்து கொள்பவராகத்தான் தமிழ்மணத்தில் தெரியும்.

இன்னும் கொஞ்சம் நெருங்கிய பதிவர் வட்டாரங்களில் அவரின் சமூக சேவைகளின்பால் ஈடுபாடு கொண்டரென்பதும் சில சேவைகள் செய்துகொண்டிருக்கிறார் என்றும் தெரியும்

ஆனால் இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவை பாருங்கள்.IBM ல் ஒரு நல்ல பொறுப்பில் இருக்கும் போது அதை விட்டுவிட்டு முழுநேர சேவையில் ஈடுபடவேண்டுமானால் எந்த அளவுக்கு இளகிய மனமும் சமூக அக்கறையும் வேண்டும்

அது சொந்த ஊரோ சொந்த மாநிலமோ கூட கிடையாது.அந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்கு தன்னுடைய எதிர்காலத்தை தள்ளிவைத்துவிட்டு உழைக்கப்போகிறார்.

அந்த மெயிலை படித்தாலே அவரை பற்றீயும் அவரின் முடிவு பற்றியும் எல்லாமே புரிந்துவிடும்.சில விஷயங்களுக்கு வார்த்தைகளை தேடி போட்டு ஜல்லியடிக்க வேண்டியதில்லை.

ஆனால் அதைப்படித்தவுடன் எனக்கு வந்த குற்ற உணர்வில் இருந்து மீழ ரொம்ப நேரம் ஆனது.என்னுடைய இளவயதில் இருந்து எத்தனை லட்சியங்கள் மனதில், ஒன்றொன்ராக பிழைப்பின் பொருட்டு என்று சொல்லி பின்னால் செய்யவேண்டும் என்று நினைத்து நினைத்து....

ம்ஹூம்... கடைசியில் ஒன்றைக்கூட செய்யவில்லை. பணத்தையே நோக்காகக் கொண்ட ஒரு முழு வியாபாரியாகத்தான் இப்போது இருக்க முடிகிறது.

அப்படியே செய்யும் ஏதாவது உதவிகளும் ஏதாவது ஒரு விததில் சுயநலம் சார்ந்ததாகவே இருக்குறது.

ஆனால் திரு. இம்சை? ஏதாவது ஒரு பர்சண்ட் சுயநலம் இருக்கிறதா அவர் முடிவில்?அவரை விட இந்த முடிவுக்கு ஆதரவளிக்கும் அவர் மனைவியை பாருங்கள். இதில் இம்சைக்கு தோள் கொடுத்து குடும்பத்தை தான் சுமக்க தயாராகிறார். யார் இதில் உயர்ந்தவர் என்று சொல்ல?

ஆனால் இம்சை கடக்க வேண்டிய பாதை கண்டிப்பாக கரடுமுரடாகத்தான் இருக்கும்.அணில் அளவுக்காவது நான் உதவ விரும்புகிறேன்.